அடுத்த சில மணி நேரங்களில், தம்பதிக்குள் கள்ளக்காதல் விவகாரம் சண்டையாக மாறியது. அப்போது தனது மனைவியை விக்ரம் அடித்து தாக்கினார். ஒருகட்டத்தில் வீட்டில் இருந்த கூர்மையான ஆயுதத்தால், மனைவியின் மூக்கை அறுத்தார். பின்னர் அறுத்து எடுத்த மூக்கை தனது சர்ட் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு அங்கிருந்து தப்பியோடினார். மூக்கில் இருந்து ரத்தம் கொட்டிய நிலையில் கூச்சலிட்ட சீமா தேவியை, அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்த போலீசார், விக்ரம் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றர். தலைமறைவாக இருந்த விக்ரமை நேற்று போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து லக்கிம்பூர் கேரி போலீஸ் அதிகாரி சந்தீப் சிங் கூறுகையில், ‘தனது மனைவியைத் தாக்கி அவரது மூக்கை அறுத்த கணவனை கைது செய்துள்ளோம். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது’ என்றார்.