Saturday, October 5, 2024
Home » அத்திப்பழத்தின் மகத்துவம்

அத்திப்பழத்தின் மகத்துவம்

by Nithya

நன்றி குங்குமம் தோழி

*உலர்ந்த அத்திப்பழங்களில் அதிக கால்சியம், செம்பு, பொட்டாசியம், இரும்பு, மாங்கனீஸ், துத்தநாகம், செலினியம் போன்ற சத்துக்கள் அதிகமான அளவில் உள்ளன. தினமும் சாப்பிட்டு வந்தால் கால்சியம் குறைபாட்டினால் ஏற்படும் நோய்களை தவிர்க்கலாம்.
*அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகமிருப்பதால் எளிதில் செரிமானம் செய்து நம் உடலில் தேவையற்ற கொழுப்புகள் தங்காமல் தடுக்கிறது.
*உடல் பருமனாக இருப்பவர்கள் எடையை குறைக்க அத்திப்பழத்தை கட்டாயம் சாப்பிட வேண்டும்.
*மலச்சிக்கலுக்கு நல்ல மருந்தான இப்பழம் இருமல், தொண்டை எரிச்சலை கட்டுப்படுத்துவதுடன் கல்லீரல் வீக்கத்தையும் குணப்படுத்தும்.
*அத்திப்பழம் கர்ப்பப்பைக்கு வலுவைத் தரக்கூடியது.
*நரம்புத்தளர்ச்சி, ஆஸ்துமா, தோல் சம்பந்தமான நோய்கள், மூலநோய், கண் பார்வை குறைபாடுகள், மூளைக் கோளாறுகள் போன்ற பாதிப்புடையவர்கள் அவசியம் சாப்பிட வேண்டிய பழம்.
*பித்தத்தை தணிக்கும். செரிமானப் பிரச்னையால் உண்டாகும் வயிற்று உபாதைகளை நீக்கும்.
*ரத்தத்தில் அதிகமான கொழுப்பு,அல்சரை போக்கும்.
*வாய் துர்நாற்றத்தைப் போக்கும்.
*தினமும் 2 அத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தால் ரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடல் வளர்ச்சியடையும்.
*நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக சிறுநீர் வெளியேறும்போது ஏற்படும் கால்சியம் குறைபாட்டை சரி செய்யும்.
*உடல் பொலிவு பெறவும், தலைமுடி நன்கு வளரவும், இளமை நீடிக்கவும் அத்திப்பழம் சாலச்சிறந்தது.

– கே.பிரபாவதி, கன்னியாகுமரி .

You may also like

Leave a Comment

three × 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi