ஆனால் சிகிச்சை பலன் இல்லாமல் மூச்சு திணறலால் பிரியங்கா உயிரிழந்துள்ளார். இந்நிலையில் பிரியங்கா சிகிச்சை பெற்ற மருத்துவர் போலி மருத்துவர் என்றும் அவரது சிகிச்சைக்கு பின்னரே உடல்நிலை மோசமாகி உயிரிழந்ததாகவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியது.
இதை அடுத்து உயிரிழந்த இளம்பெண் சிகிச்சை பெற்ற மருத்துவமனையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அதிகாரிகள் சோதனைக்கு வருவதை முன்கூட்டியே அறிந்து மருத்துவர் பிரியா தப்பி சென்றுவிட்ட நிலையில் சுகாதாரத்துறையினர் அளித்த புகாரின் அடிப்படையில் தேடுதலில் ஈடுபட்டு வந்த போலீசார் வேலூர் அருகே பிரியாவை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் டிப்ளமோ நர்சிங் படித்து பாதியிலேயே படிப்பை கைவிட்டது தெரியவந்தது.