இரவில் ஏராளமான மாடுகள் வயலில் இறங்கி, நெல் பயிரை நாசம் செய்கின்றன. மேலும், பகலில் பஜார் வீதிகளில் படுத்து போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையறாக இருக்கின்றன. அதேபோல, இரவில் காட்டு பன்றிகள் தொல்லையும் அதிகமாக இருக்கிறது. நெல் வயலில் இறங்கி நெற்பயிரை நாசம் செய்கின்றன. ஏற்கனவே விவசாயம் செய்வதில் ஏற்படும் கடனில் அவதிப்பட்டு வருகிறோம். எனவே, நெற்பயிர் விவசாயத்தை காக்கும் வகையில் காட்டுப்பன்றி ஒழிக்கவும் மற்றும் மாடுகளை கட்டுபடுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.