பெண் குரலில் பேசி 17 வயது மாணவியை காதலிக்க வற்புறுத்திய மாணவர் கைது

கோவை: போனில் பெண் குரலில் பேசி தோழியாக பழகி காதலிக்க வற்புறுத்திய கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர். கோவை குனியமுத்தூர் பைபை நகரை சேர்ந்த தொழிலதிபரின் 17 வயது மகள் தனியார் பள்ளியில் பிளஸ் டூ படித்து வருகிறார். இவரிடம் உக்கடம் அருள் நகரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஜூனைத் (22) என்பவர், செல்போனில் ஸ்னாப் ஷாட் மூலம் பெண் குரலில் பேசி தோழி போல் பழகியுள்ளார். இரண்டு மாதமாக பள்ளி மாணவியும் அவர் பெண் என நினைத்து பேசி பழகி வந்தார். ஆனால், அதன் பிறகு தன்னுடன் ஸ்னாப் சாட்டில் பேசியது வாலிபர் என அந்த மாணவிக்கு தெரியவந்தது. இதனால், அதிர்ச்சியடைந்து ஜூனைத்துடன் பேசுவதை நிறுத்திவிட்டார். ஆனால், ஜூனைத் மாணவியை தொடர்ந்து காதலிக்கும்படி வற்புறுத்தி வந்துள்ளார்.

இதற்கு மாணவி சம்மதிக்கவில்லை. சம்பவத்தன்று பள்ளி மாணவி வீட்டை கண்டுபிடித்து அவர் வீட்டிற்கு வந்து வாசலில் காத்திருந்தார். இதை மாணவியின் தந்தை பார்த்து விட்டார். ஜூனைத்திடம் சென்று இங்கு ஏன் இருக்கிறாய் என கேட்டுள்ளார். அதற்கு பதில் சொல்லாமல் ஓட முயன்றார். ஆனால், மடக்கி பிடிக்க முயன்ற போது ஜூனைத்தின் செல்போன் தவறி கீழே விழுந்தது. அதை எடுத்து பார்த்த போது ஜூனைத், பல இளம்பெண்களிடம் ஸ்னாப் ஷாட் மூலமாக பேசி பழகி வந்ததும், காதலிக்க சொல்லி வற்புறுத்தி வந்ததும் தெரியவந்தது. சில மாணவிகளை அவர் காதலிப்பது போல் நடித்துள்ளதாகவும் தெரிகிறது. இதுதொடர்பாக, குனியமுத்தூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிந்து ஜூனைத்தை கைது செய்தனர்.

Related posts

சிந்து சமவெளி நாகரிகத்தை கண்டுபிடித்த ஜான் மார்ஷலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி

ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிகளுக்கான சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு இன்று தொடங்குகிறது

மேற்குவங்கத்தில் பயிற்சி மருத்துவர்களின் போராட்டம் வாபஸ்