Saturday, September 28, 2024
Home » பெண் விமானியை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டல்: இன்ஜினியர் மீது வழக்கு

பெண் விமானியை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டல்: இன்ஜினியர் மீது வழக்கு

by Neethimaan

கோவை: கோவையில் பெண் விமானியை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை அடுக்குமாடி குடியிருப்பில் பெற்றோருடன் வசிப்பவர் 35 வயது பெண். திருமணமாகவில்லை. இவர் ஏர் இந்தியா விமானத்தில் விமானியாக பணியாற்றினார். பின்னர் அந்த பணியை ராஜினாமா செய்துவிட்டு மத்திய அரசு போட்டி தேர்வுக்கு தயாராகி வந்தார். அப்போது அவருக்கு கோவையை சேர்ந்த ஆனந்தராஜ் (37) பழக்கமானார். இவர் இன்ஜினியரிங் முடித்துவிட்டு சொந்தமாக தொழில் செய்து வருகிறார். இருவரும் ஒரே அடுக்குமாடி குடியிருப்பில் வசித்ததால் பழக்கம் ஏற்பட்டது. ஆனந்தராஜ் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில், ஆனந்தராஜ் அந்த பெண்ணின் தந்தையிடம் சென்று, ‘‘நான், எனது மனைவியை விவாகரத்து செய்ய நோட்டீஸ் அனுப்பி உள்ளேன்.

இந்த வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இருவருக்கும் விரைவில் விவாகரத்து கிடைத்துவிடும். அதன்பின்பு உங்களது மகளை திருமணம் செய்து கொள்கிறேன்’’ என தெரிவித்துள்ளார். அதற்கு அவரும் சம்மதம் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து அந்த பெண்ணும் ஆனந்தராஜூம் மிகவும் நெருக்கமாக பழகி வந்தனர். இந்த சூழலில், அந்த பெண் ரூ16 லட்சத்தில் புதிய கார் ஒன்றை வாங்க முடிவு செய்தார். அந்த பணத்தை வாங்கிய ஆனந்தராஜ், கூடுதலாக பணம் போட்டு சொகுசு கார் வாங்கி தருவதாக கூறியுள்ளார். ஆனால் அவர் பணத்தை வாங்கி கொண்டு கார் வாங்கி தரவில்லை. பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை. இதனையடுத்து கடந்த ஜூலை மாதம் ஆனந்தராஜ் அந்த பெண்ணை தனது வீட்டுக்கு கூட்டிச்சென்றார். அப்போது திருமணம் செய்வதாக உறுதி அளித்தார். பின்னர் அந்த பெண்ணை அவர் உறவுக்கு அழைத்தார்.

அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்தார். அப்போது அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஆனந்தராஜ் அந்த பெண்ணை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கி, அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. அதனை அந்த பெண்ணுக்கு தெரியாமல் செல்போனில் வீடியோ எடுத்து உள்ளார். அந்த வீடியோவை தனது லேப்டாப்பில் பதிவு செய்து கொண்டார். இதன்பிறகு அந்த பெண் ஆனந்தராஜிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டுள்ளார். ஆனால் அவர் திருமணம் செய்ய மறுத்து ஆபாச வீடியோவை காட்டி அடிக்கடி உறவுக்கு அழைத்து மிரட்டியுள்ளார். இதுகுறித்து அந்த பெண் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் (மத்தியம்) புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் மிரட்டல், தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ஆனந்தராஜ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

You may also like

Leave a Comment

thirteen + 8 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi