Saturday, September 28, 2024
Home » ரூ.6.25 லட்சம் லஞ்ச பணம் பறிமுதல் பெண் ஆய்வாளர் சஸ்பெண்ட்

ரூ.6.25 லட்சம் லஞ்ச பணம் பறிமுதல் பெண் ஆய்வாளர் சஸ்பெண்ட்

by Ranjith
Published: Last Updated on

வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக வசந்தி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 10ம் தேதி காலை பணி முடிந்து காரில் அவரது வீட்டுக்கு புறப்பட்டார். ராணிப்பேட்டை சிப்காட் பாரதி நகர் எக்ஸ்டென்ஷனில் உள்ள அவரது வீட்டின் அருகே சென்றபோது, வசந்தியின் காரை திடீரென லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மடக்கி சோதனையிட்டனர்.

அப்போது கணக்கில் வராத ரூ.3 லட்சம் மற்றும் அவரது வீட்டில் நடத்திய சோதனையில் ரூ.3 லட்சத்து 25 ஆயிரம் கைப்பற்றப்பட்டது. இவை அனைத்தும் லஞ்சமாக பெற்ற பணம் என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே போக்குவரத்து துறை சார்பில் துறை ரீதியாக விசாரணை நடத்தப்பட்டு, ஆய்வாளர் வசந்தியை சஸ்பெண்ட் செய்து போக்குவரத்து ஆணையர் சண்முகசுந்தரம் நேற்று உத்தரவிட்டார்.

You may also like

Leave a Comment

13 + 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi