கோவை: மருதமலையில் 3-வது நாளாக தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் யானையின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படுகிறது. கிரேன் உதவியுடன் நிற்க வைக்கப்பட்டு யானைக்கு சிகிச்சை அளித்து வருகிறது கால்நடை மருத்துவக் குழு. தண்ணீர், உணவுகளை யானை சீராக உட்கொள்வதாக அதிகாரிகள் தகவல் அளிக்கின்றனர்.