திருச்சி: கோவையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் விரைவு ரயிலில் புதுக்கோட்டையை சேர்ந்த 26 வயது பெண் வக்கீல் ஒருவர் நேற்றுமுன்தினம் இரவு பயணம் செய்தார். அந்த பெட்டியில் சேலம் ஆத்தூர் பகுதியை சேர்ந்த சந்திரபிரசாத் (33) என்பவரும் வந்தார். இவர்திருச்சி சேதுராப்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்தார்.
இவர் திருச்சி ரயில்வே சந்திப்பில் இறங்குவதற்காக சந்திரபிரசாத் தனது பைகளை எடுத்துக்கொண்டு வரும்போது பெண் வக்கீல் மீது உரசி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், பெண் வக்கீல் அளித்த புகாரின்பேரில் போலீசார் சந்திரபிரசாத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.இதையடுத்து, சந்திரபிரசாத்தை பணியிடை நீக்கம் செய்து கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.