பெண் டாக்டர் தற்கொலை

ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் நகராட்சி கோனேரிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் குப்புசாமி (46). அரசு போக்குவரத்துக் கழக டிரைவர். இவரது மனைவி சுசீலா. இவர் அரசு பள்ளி தலைமை ஆசிரியராக உள்ளார். இவர்களது மகள் பிரியதர்ஷினி (25). டாக்டரான இவர், கடந்த ஓராண்டுக்கு முன்பு தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் மருத்துவப் படிப்பை முடித்து விட்டு, வீட்டில் இருந்து மேற்படிப்பிற்கான நுழைவுத் தேர்விற்கு பயிற்சி மேற்கொண்டு வந்தார். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக பிரியதர்ஷினி, மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதற்காக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் வீட்டில் இருந்த பிரியதர்ஷினி, இரவு உணவுக்கு பின்பு வழக்கம் போல் தனது அறைக்கு சென்றார். நேற்று நீண்டநேரமாகியும் கதவை திறக்காததால் பெற்றோர் திடுக்கிட்டனர். இதையடுத்து, அக்கம்-பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு பிரியதர்ஷினி தூக்கில் தொங்குவதை கண்டு திடுக்கிட்டனர். உடனே, அவரை மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்த டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து விட்டு, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

புனே அருகே புஷி அணைப்பகுதியில் உள்ள அருவியில் வெள்ளப்பெருக்கு: 2 பேர் உயிரிழப்பு

ஒய்எஸ்ஆர் காங். எம்பி வீட்டு காவலில் வைப்பு: ஆந்திராவில் பரபரப்பு

திருச்சியில் கலைஞர் பெயரில் பிரமாண்ட நூலகம் மத்திய மாவட்ட இளைஞர்களுக்கு கலங்கரை விளக்கமாக திகழும்: கல்வியாளர்கள் கருத்து