சில சமயங்களில் காட்டுமாடுகள் பொதுமக்களை தாக்கவும் செய்கிறது. இதனால், மனித- விலங்கு மோதல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சமீப காலமாக நுந்தளா கிராமத்துக்கு செல்லும் சாலையில் ஒற்றைக் காட்டு மாடு ஒன்று உலா வருகிறது. இதனால், அவ்வழியாக நடந்து செல்லக்கூடிய பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். சில சமயங்களில் வாகனங்களில் செல்பவரை காட்டுமாடு விரட்டுகிறது. எனவே, காட்டு மாட்டை வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.