சென்னை: வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சைதை பகுதி பழையபொருள் வியாபாரிகள் சங்கத்தின் சார்பாக 77வது சுதந்திர தின கொடியேற்றுவிழா, சங்க அலுவலக திறப்பு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என முப்பெரும் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு 1000 பேருக்கு அன்னதானம் மற்றும் ஏழை எளியவர்களுக்கு உதவிகள் வழங்கினார்.
மாநிலத்தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தேசியக்கொடியை ஏற்றிவைத்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கினார். உடன் சென்னை மண்டல தலைவர் கே.ஜோதிலிங்கம், மாநில செய்தி தொடர்பாளர் பி.பாண்டியராஜன், மாநில கூடுதல் செயலாளர் வி.பி.மணி, பழையபொருள் வியாபாரிகள் சங்கத்தலைவர் இ.எம்.ஜெயக்குமார் மற்றும் நிர்வாகிகள் இருந்தனர்.