இம்பால்: மணிப்பூர் அமைச்சரவை கூட்டம் நேற்று முதல்வர் என் பிரேன் சிங் தலைமையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மணிப்பூர் தகவல் மற்றும் மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் சபம் ரஞ்சன் கூறியதாவது, “மணிப்பூர் சட்டப்பேரவையின் 5வது கூட்டத்தொடர் வரும் 28ம் தேதி நடைபெற உள்ளது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் உரையுடன் தொடங்கும்’’என்றார்.