தொடர்ந்து மாரநாடு கருப்புசாமிக்கும், கட்டுச்சோறு கருப்புக்கு சிறப்பு அலங்காரம் அபிஷேகம் செய்து பச்சரிசி பொங்கல் வைக்கப்பட்டது. இதையடுத்து நள்ளிரவில் பக்தர்களால் கோயிலுக்கு நேர்த்திக்கடனாக விடப்பட்ட 300 ஆடுகள் பலியிடப்பட்டன. இந்த ஆட்டுக்கறியை மண்பானையில் வைத்து சமைத்து, நேற்று காலை 6.30 மணிக்கு சிறப்பு பூஜை நடத்தி சமைத்த உணவை, 360 மண்பானைகளில் வைத்து பக்தர்கள் தலையில் சுமந்து 4 கிமீ தொலைவில் உள்ள சாப்பாட்டு பொட்டலில் இறக்கி வைத்தனர். விழாவில் பங்கேற்ற பங்காளிகள் மற்றும் 32 கிராமங்களைச் சேர்ந்த 5,000 பேருக்கு உணவு பரிமாறப்பட்டது. 3 வருடங்களுக்கு பிறகு நடந்த இந்த பாரம்பரிய திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.