இந்த நிலையில் சோலையாறு அணையின் இடது கரை பகுதியில் இன்று அதிகாலை மண் சரிந்து கற்கள் மரத்துடன் ஒரு வீட்டின் மீது விழுந்தது. அப்போது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த ராஜேஸ்வரி(65), அவரது பேத்தி தனபிரியா(14) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தனபிரியா, சோலையாறு அணை அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். ராஜேஸ்வரியின் கணவர் ஆறுமுகம் (70) அருகில் உள்ள தங்கும் விடுதியில் இரவு பணிக்கு சென்று விட்டார். இதனால் அவர் உயிர் தப்பினார். தனபிரியாவின் பெற்றோர் கோவையில் பணிபுரிந்து வருகின்றனர். இத்தகவலறிந்த அவர்கள் வால்பாறைக்கு விரைந்து வந்து மகள், அவரது பாட்டியின் சடலத்தை பார்த்து கதறியழுதனர். சோலையாறு போலீசார் சடலத்தை மீட்டு வால்ாபறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மண்சரிந்து வீட்டின் மீது விழுந்து பாட்டி பேத்தியுடன் பலியானது இப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.