அப்போது இருசக்கர வாகனத்தில் முகமுடி அணிந்து வந்த மர்ம நபர்கள் தனது கழுத்தில் அணிந்திருந்த 5 சரவன் தாலிச் சரடை பறித்து மின்னல் வேகத்தில் பறந்ததாக காவல் நிலையத்தில் பிரசாந்தி புகார் கொடுத்தார். புகாரின் பேரில் டிஎஸ்பி விக்னேஷ், இன்ஸ்பெக்டர் மதியரசன் ஆகியோர் அப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு மேற்கொண்டனர். இதில் அங்குள்ள சிசிடிவி கேமராக்களில் வழிப்பறி போன்ற எந்த நிகழ்வும் நடக்காததால், பிரசாந்தியிடம் போலீசார் துருவித்துருவி விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் தந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவருக்கு பணம் தர வேண்டும் என்பதற்காக திருத்தணி கவரை தெருவில் உள்ள விநாயகா ஜுவல்லர்ஸ் என்ற அடகு கடையில் ரூ.1.30 லட்சத்திற்கு தனது நகையை பிரசாந்தி அடமானம் வைத்து பணம் வாங்கியதும், அதனை மறைக்க வழிப்பறி சம்பவம் நடந்ததுபோல் அவர் நாடகமாடியதும் தெரிய வந்தது. இதனையடுத்து மூன்று மணி நேரத்துக்கு மேலாக போலீசாரை அலைக்கழித்த பிரசாந்தியை காவல்துறையினர் எச்சரித்து, அடகு வைத்து பெற்ற பணம் மூலம் மீண்டும் நகையை மீட்டுக் கொடுத்து அனுப்பி வைத்தனர்.