இந்நிலையில், கடந்த வாரம் நிலத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ராஜேந்திரனை வெங்கடேஷ் வேன் ஏற்றி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றார். இதுகுறித்து, பூந்தமல்லி போலீசார் வழக்குப் பதிந்து தலைமறைவான வெங்கடேஷை தேடி வந்தனர். இதனிடையே, பாரிவாக்கம் பகுதியில் பதுங்கி இருந்த வெங்கடேஷை போலீசார் நேற்று கைது செய்தனர். அப்போது தவறி விழுந்ததில் அவரது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.