மகளிடம் சில்மிஷம்: தந்தை கைது


சேலம்: சேலம் சீலநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் வெங்கடேசன் (43), கூலித்தொழிலாளி. இவரது மனைவி இறந்துவிட்டார். 2 மகள்கள் உள்ள நிலையில், மூத்தமகள் காதல் திருமணம் செய்துகொண்டு தனியாக சென்றுவிட்டார். 17 வயது கொண்ட 2வது மகள், சேலத்தில் உள்ள பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் 2 நாட்களுக்கு முன் பள்ளிக்கு சென்ற 17 வயது சிறுமி, தனது ஆசிரியையிடம் ஒரு புகார் தெரிவித்தார். அதில், தனது தந்தை வெங்கடேசன் ஆபாசமாக நின்றுகொண்டு பாலியல் சில்மிஷத்தில் ஈடுபடுகிறார் எனக்கூறியுள்ளார்.

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியை, சேலம் டவுன் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் கொடுத்தார். இதுகுறித்து போலீசார் மாணவியிடம் விசாரித்தபோது, தந்தை செய்யும் பாலியல் சேட்டைகளை மாணவி தெரிவித்துள்ளார்.இதையடுத்து வெங்கடேசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

Related posts

ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

ரூ2000க்கு மேல் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி?.. நாளை நடக்கும் கூட்டத்தில் முடிவு