இந்த நிலையில் நேற்றிரவு லிங்காபுரம் அடுத்துள்ள வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 2 காட்டு யானைகள் அப்பகுதியில் உள்ள தயாநிதி (45), ராஜன் (42) உள்ளிட்டோரின் விவசாய நிலங்களுக்குள் புகுந்தன. இதையறிந்த வனத்துறையினர் அங்கு சென்று அப்பகுதி விவசாயிகள், வாலிபர்களுடன் இணைந்து நீண்ட நேரம் போராடி 2 யானைகளையும் வனப்பகுதிக்குள் விரட்டினர். தொடர்ந்து வனவிலங்குகள் நடமாடுவதால், அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.