அறுவடை செய்யப்பட்ட விளைபொருட்களை உலர்த்துவதற்கும், பயிரிடுவதற்குமான பசுமைக்குடில்கள், சோலார் ட்ரையர்கள், சோலால் கோல்டு ஸ்டோரேஜ், கையடக்க கோல்டு ஸ்டோரேஜ் ஆகியவற்றை இந்த நிறுவனம் பல்வேறு இடங்களில் நிறுவியுள்ளது. இந்நிலையில் இந்தப் புதிய உணவுப் பாதுகாப்பு தளம் விவசாயிகளுக்கு சேவை அளிக்கும் வகையில் நிறுவப்பட்டுள்ளது. இந்த இணையதளம் வழியாக அறுவடைக்குப் பின்பு எந்தெந்த நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பதை விவசாயிகள் அறிந்துகொள்ள முடியும். அதன் வாயிலாக தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை நீண்டகாலம் பாதுகாக்கவும் முடியும்.விவசாயிகள் ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்ள முடியும். என்ன விதமான புதிய தொழில்நுட்பங்கள் வந்திருக்கின்றன என்பதைப் பற்றிய விவரங்களைப் பகிர்ந்துகொள்ள முடியும். மேலும், தேவைக்கும் வழங்கலுக்கும் இடையே ஒருங்கிணைப்பையும் ஏற்படுத்த முடியும். அதோடு, இந்த இணையதளத்தில், பல உற்பத்திப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும்.
அவை சோலால் ட்ரையர், தட்ப வெப்பநிலைக் கட்டுப்பாடுடன் கூடிய பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களைக் கொண்டிருக்கும். இந்தியாவின் தோட்டக்கலைத் துறையும், மீன்வளத்துறையும், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 15 முதல் 20 சதவிகித அளவுக்கு அறுவடைக்குப் பின்பான இழப்புகளை எதிர்கொள்கிறது. இதனால் வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடு அதிகரிக்கிறது. மதிப்புக் கூட்டலுக்கான வாய்ப்பும் பறிபோகிறது. இந்தச் சவால்களை எதிர்கொள்வதற்கு ஏற்ப, புதுமையான தொழில்நுட்பங்களோடு உருவாக்கப்பட்டுள்ள இந்த இணையதளத்தை விவசாயிகள் அனைவரும் பயன்படுத்தி பலன் அடைய வேண்டும் என இந்நிறுவனம் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
“புதிய தயாரிப்புகள், தொழில்நுட்பங்கள் வாயிலாக விவசாயத்தில் நாங்கள் புதுமை களையும், வளர்ச்சியையும் கொண்டுவர விரும்புகிறோம். இதனால் சமூகம் பலன் அடையும். அதேநேரம் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பும் குறையும். நமது விவசாயிகளின் கடும் உழைப்புக்கு எங்களுடைய உணவுப் பாதுகாப்பு தளம் நிச்சயம் கூடுதல் மதிப்பைத் தரும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” என்கிறார் கோவேஸ்த்ரோவின் நிர்வாக இயக்குநர் ஆனந்த் சீனிவாசன்.