பஞ்சாப்பில் இருந்து 10,000 டிராக்டர்களுடன் டெல்லியை நோக்கி விவசாயிகள் படையெடுக்க உள்ளனர். இதை தடுக்க விவசாய அமைப்பு தலைவர்களை கைது செய்ய போலீசார் வீடு வீடாக சோதனை நடத்தி வருகின்றனர். பஞ்சாப் விவசாயிகள் அரியானா வழியாக டெல்லிக்கு செல்வதை தடுக்க அம்பாலாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் மற்றும் அரியானா இடையேயான ஷம்பு எல்லை சிமெண்ட் தடுப்பு மற்றும் முள்வேலியால் முற்றிலுமாக மூடப்பட்டுள்ளது. காகர் ஆற்றின் பாலம் மூடப்பட்டது. டிராக்டர்கள் செல்ல முடியாத வகையில் உள்ளே குழி தோண்டப்பட்டு வருகிறது. மேலும் வரும் 16ம் தேதி நாடு முழுவதும் பல்வேறு விவசாயிகள் அமைப்புகளால் பாரத் பந்த் நடத்தப்படுகிறது. லோக்சபா தேர்தலை முன்னிட்டு, ஆளுங்கட்சிக்கு அழுத்தம் கொடுக்க விவசாயிகள் அமைப்புகள் முயற்சித்து வருகின்றன.