கோமாலா நிலம் ஆக்கிரமிப்பு, சட்டவிரோத கல்குவாரிகள், விலையை குறைக்க தோல்வி கண்டுள்ளது என குற்றம்சாட்டிய விவசாய சங்கத்தினர் அமைச்சருக்கு கருப்பு கொடி காண்பிக்க போவதாக எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சாம்ராஜ்நகர் நகர போலீசார் விவசாய சங்கத்தின் ஹொன்னூர் பசவண்ணா, ஹெக்கவாடி மகாதேவய்யா, பன்யதஹூண்டி குமார், சிவமூர்த்தி ஆகியோரை காகலவாடி காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து பின்னர் விடுதலை செய்தனர்.