ஜெகன்மோகன் அலட்சியத்தால் கடந்த 5 ஆண்டுகளாக விவசாயத்துறை கடும் சேதமடைந்தது. ஜெகன்மோகனால் ஆந்திராவில் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். சந்திரபாபு, பவன்கல்யாண் கூட்டணி அரசு, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆதரவளிக்க வேண்டும். பாஜவுடன் கூட்டணி வைத்துள்ள முதல்வர் சந்திரபாபுநாயுடு இதை சாதாரண மழையாக பார்க்காமல், மாநில பேரிடராக அறிவிக்க வேண்டும். அண்டை மாநிலமான தெலங்கானாவில் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வதாக ராகுல் உறுதியளித்தார்.
அதன்படி முதல்வர் ரேவந்த் ரெட்டி தள்ளுபடி செய்துள்ளார். ஆந்திர மாநிலத்தில் ஒவ்வொரு விவசாயிக்கும் சராசரியாக ரூ.2.5 லட்சம் கடன் உள்ளது. இந்த கடனை தள்ளுபடி செய்ய சந்திரபாபு மத்திய அரசை வற்புறுத்த வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் ஆந்திராவுக்கு ஒன்றிய பாஜக அரசு எந்த ஒரு நல்ல திட்டத்தையும் செய்யவில்லை. எனவே சந்திரபாபு நாயுடு ஆந்திராவின் வளர்ச்சிக்காக நலத்திட்டங்களை ஒன்றிய அரசை வற்புறுத்தி கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.