கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜகடை வனப்பகுதியில் முகாமிட்டிருந்த ஒற்றை யானை தாக்கி விவசாயி சாம்பசிவம் (55) உயிரிழந்தார். யானை தாக்கி உயிரிழந்தவரின் உடலை சாலையில் வைத்து உறவினர்கள் சாலைமறியலில் ஈடுப்பட்டுள்ளார். தொடர்ந்து இதேபோன்று உயிரிழப்புகள் ஏற்படும் நிலையில் வனத்துறை முறையான எச்சரிக்கை அளிப்பதில்லை என புகார் எழுந்துள்ளது.