விபத்தில் விவசாயி பலி

 

திருவாடானை, நவ.15: திருவாடானை அருகே குளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் உலகராஜா(45). விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு தேவகோட்டையில் உள்ள உறவினர் வீட்டிற்கு டூவீலரில் சென்றுள்ளார். திருவாடானை அருகே தொண்டி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கல்லூர் பகுதியில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த டூவீலர் சாலையோரத்தில் கவிழ்ந்ததில் உலகராஜா தலையில் பலத்த ரத்தகாயம் ஏற்பட்டது. தேவகோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து திருவாடானை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

பல்கலைக்கழக நிர்வாகம் தகவல் வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில்

முன்னாள் துணை கலெக்டர் மயங்கி விழுந்து சாவு வேலூர் கலெக்டர் அலுவலகத்தில்

3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றினால் இடமாற்றம் பட்டியல் தயாரிக்க உத்தரவு பள்ளிக்கல்வித்துறையில்