மணல்மேல்குடி வேளாண்மை உதவி இயக்குநர் ராதாகிருஷ்ணன் வாழ்த்தி பேசினார். ஆடுதுறை நெல் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் முனைவர் சுப்ரமணியன், ஆடுதுறை நெல் ரகங்களின் சிறப்புகள் பற்றி விளக்கினார். மேலும், டிஎன்ஏயூ விதை அமிர்தம் கொண்டு நேரடி நெல் விதைப்பில் விதை நேர்த்தி செய்து பயன்பெற வேண்டும் என விவசாயிகளுக்கு அறிவுறுத்தினார். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக விதை மையத்தின் இயக்குநர் முனைவர் உமாராணி, டிஎன்ஏயூ விதை அமிர்தத்தின் பயன்பாடு மற்றும் நன்மைகள் குறித்து விளக்கி பேசினார். விதை அறிவியல் துறை பேராசிரியர் ராஜா, இணைப் பேராசிரியர் மேனகா ஆகியோர் நேரடி நெல் விதைப்பில் விதை அமிர்த விதை நேர்த்தி மூலம் கிடைக்கும் பயன்பாடுகள் குறித்து வயல்வெளியில் செயல் விளக்கம் அளித்தனர். அப்போது விவசாயிகள் வயல்வெளியில் இறங்கி நேரடியாக செயல்விளக்கம் பெற்று பலன் அடைந்தனர். மொத்தத்தில் விவசாயிகளின் விழாவாகவே இருந்தது இந்த வயல் விழா.
விதை அமிர்தம்
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் சார்பில் விதை அமிர்தம் என்ற பெயரில் விதை நேர்த்திக்கான தொழில்நுட்பத்தை விவசாயிகளுக்கு விளக்குகிறார்கள். பல்வேறு அங்ககப் பொருட்கள் அடங்கிய விதை அமிர்தம் மூலம் விதை நேர்த்தி செய்தால் விதைப்புத்திறன் மேம்படும், பயிர்கள் செழிப்பாக வளரும் என்கிறார்கள் வேளாண் அதிகாரிகள்.