நவீன் தேவையில்லாமல் சண்டை போடுவதாகக்கூறி அன்னபூர்ணா குழந்தையை தூக்கிக்கொண்டு தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். ஓராண்டாகியும் நவீனுடன் சேர்ந்து வாழ செல்லவில்லை. இதையடுத்து, கடந்த புதன்கிழமை அன்னபூர்ணாவின் வீட்டிற்கு சென்ற நவீன், மீண்டும் தன்னுடன் சேர்ந்து வாழுமாறு கேட்டார். அன்னபூர்ணாவின் தந்தை நவீனிடம் சில நிபந்தனைகளை விதித்து, அன்னபூர்ணாவை சமாதானம் செய்துவைக்க, இருவரும் சேர்ந்து வாழ ஏற்பாடு நடந்தது. அதன்படி, அன்னபூர்ணாவை அவரது தந்தை பசவராஜப்பா மற்றும் தாய் கவிதா ஆகிய இருவரும் அழைத்து வந்து நவீன் வீட்டில் விட்டனர்.
அவர்களை பேருந்தில் ஏற்றிவிட்டு வருவதாகக்கூறி அன்னபூர்ணாவையும் காரில் அழைத்துச்சென்ற நவீன், மனைவி அன்னபூர்ணா, மாமனார் பசவராஜப்பா மற்றும் மாமியார் கவிதா ஆகிய மூவரையும் இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்தார். அவர்களது உடலை வடகெரெ தாலுகா ஜோலடடாகி கிராமத்திற்கு வெளியே தூக்கி எறிந்திருக்கிறார். சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்த சைதாப்பூர் போலீசார், நவீனை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.