மேலும் கல்லால் தாக்கி தனலெட்சுமியை கொன்று வீட்டின் முன்பு மணல் பகுதியில் உடலை தோண்டி தர்மராஜ் புதைத்துள்ளார். தனலட்சுமியிடம் தர்மராஜ் தகராறு செய்ததை அறிந்த தனலட்சுமியின் அண்ணன் முனியாண்டி ராமேஸ்வரம் போலீசாருக்கு தகவல் அளித்தார். டிஎஸ்பி உமாதேவி தலைமையிலான போலீசார், தர்மராஜை கைது செய்து விசாரணை நடத்தினர். தர்மராஜ் அளித்த தகவலின் அடிப்படையில், வீட்டின் முன்பு புதைத்த தனலெட்சுமியின் உடலை போலீசார், தாசில்தார் செல்லப்பா, விஏஓ ரோட்ரிகோ முன்னிலையில் தோண்டி எடுத்து, மருத்துவ பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.