டெல்லி: நாடாளுமன்றத்தில் பொய் தகவல்களை பிரதமர் மோடி கூறுவதாக திமுக எம்.பி. திருச்சி சிவா குற்றச்சாட்டியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் பேச கூட போதிய வாய்ப்பு வழங்கப்படுவதில்லை. பிரதமரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தோம். பிரதமரின் பேச்சுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என கார்கே கோரிக்கை விடுத்தும் அவருக்கு வாய்ப்பு வழங்கவில்லை என திருச்சி சிவா கூறியுள்ளார்.