ராமதாஸ், அன்புமணி ஆதாயம் தேட முயற்சி
பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி ராமதாஸ், அன்புமணி ஆதாயம்
தேட முயற்சிக்கின்றனர் என வசந்தம் கார்த்திகேயன் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றச்சாட்டுகளை நிரூபிக்கவில்லை என்றால் அன்புமணி பதவி விலகத் தயாரா?. குற்றச்சாட்டுகளை நிரூபிக்காவிட்டால் பாமக நிறுவனர் ராமதாஸ் பொதுவாழ்வில் இருந்து விலகத் தயாரா என்றும் கேள்வி எழுப்பினார். விஷச் சாராய விவகாரத்தில் கவனக்குறைவாக செயல்பட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ராமதாஸ், அன்புமணி மீது மான நஷ்ட வழக்கு
அரசியல் ஆதாயத்துக்காக அவதூறாக பேசிய ராமதாஸ், அன்புமணி மீது மான நஷ்ட வழக்கு தொடரப்படும் என திமுக எம்.எல்.ஏ உதயசூரியன் தெரிவித்துள்ளார்.