அவர் டிக்கெட் பரிசோதனையில் ஈடுபட்ட நபரிடம், ‘‘எந்த ரயில்வே கோட்டத்தில் பணிபுரிகிறீர்கள்’’ என் கேட்டுள்ளார். பின்னர் அந்த நபரின் அடையாள அட்டைகளை வாங்கி பார்த்தபோது, அவரிடம் இருந்தது போலி அடையாள அட்டை என்பது தெரியவந்தது. இதையடுத்து மதுரை ரயில் நிலைய போலீசாரிடம் சரவணசெல்வி அந்நபரை ஒப்படைத்தார். விசாரணை யில், பிடிபட்டவர் மணிகண்டன், கேரள மாநிலம், பாலக்காடு பகுதியைச் சேர்ந்தவர் என தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.