இதில் ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய 42 போலி நிறுவனங்கள் கூட்டாக ரூ.199 கோடி உள்ளீட்டு வரி ஏய்ப்பில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. இதில் முக்கியமாக செயல்பட்ட 3 பேரை அதிகாரிகள் கண்டுபிடித்து கைது செய்தனர். பின்னர் அவர்களை பாட்டியாலா முதன்மை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு அழைத்து சென்ற அதிகாரிகள் அவர்களை நேரில் ஆஜர்படுத்தினர். அவர்களை 2 வாரம் நீதிமன்ற காவலில் வைக்கும்படி உத்தரவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.