பேஸ்புக்கில் தமிழ்நாடு முதல்வரை ஆபாசமாக பேசிய பாஜ நிர்வாகி கைது

வேலூர்: வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் பேரூராட்சி பஸ் நிலையத்தை சேர்ந்தவர் விமல்குமார்(45). இவர் பாஜக மேற்கு ஒன்றிய செயலாளராக உள்ளார். இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பற்றி பேஸ்புக் பக்கத்தில் ஆபாசமாக பேசி கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து, ஒடுகத்தூர் திமுக நகர செயலாளர் பெருமாள்ராஜா வேப்பங்குப்பம் போலீசில் நேற்று முன்தினம் இரவு புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து, ஒடுகத்தூர் பஸ்நிலையத்தில் சுற்றி திரிந்த விமல்குமாரை நேற்று இரவு கைது செய்தனர்.

Related posts

கள்ளக்குறிச்சி மாவட்டம்: வடதொரசலூரில் சிறுவர்கள், சிறுமிகள் உட்பட 7 பேருக்கு எலிக்காய்ச்சல் பாதிப்பு!

திருப்புத்தூர் அருகே காய்கறி வேன் கவிழ்ந்து விபத்து: டிரைவர், கிளீனர் படுகாயம்

ஜாமீனில் விடுவிக்கப்பட்டவர்களிடம் ‘கூகுள் லொகேஷன்’ கேட்க கூடாது: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு