Monday, July 8, 2024
Home » முகம் அழகு கொடுக்கும் முட்டைக்கோஸ்!

முகம் அழகு கொடுக்கும் முட்டைக்கோஸ்!

by Porselvi

நாம் அன்றாடம் சாப்பிடும் உணவு மூலமாகவே நமது அழகை கூட்டமுடியும். அளவு(டயட்) என்பது மிகமிக அவசியம். உணவில் தாதுப் பொருட்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். காய்கறி, பழங்கள், அதிகம் சாப்பிட வேண்டும்.
*முட்டைக்கோஸ் சாறு, சிறிதளவு ஈஸ்ட் ஒரு ஸ்பூன், தேன் மூன்றையும் கலந்து இருபது நிமிடம் முகத்தில் தடவி மிதமான சுடு தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும். இப்படி செய்தால் முகத்தில் உள்ள சுருக்கம் மறைந்து முகம் பொலிவுடன் காணப்படும்.
*ஆலிவ் எண்ணெயுடன் சர்க்கரை கலந்து உள்ளங்கைகளில் தேய்த்து கழுவினால் உள்ளங்கைகளின் கடினத் தன்மை மறைந்து மிருதுவாக மாறும்.
*பச்சை உருளைக்கிழங்கின் சாற்றை முகத்தில் தடவி வர சூரியக் கதிர்களால் ஏற்படும் கருமை நிறம் மாறும். பூசணிக்காயை சிறு துண்டு களாக்கி அதை கண்களை சுற்றி வைத்தால் கருவளையம் மறையும்.
*இரண்டு ஸ்பூன் முள்ளங்கி சாற்றுடன் இரண்டு ஸ்பூன் மோர் சேர்த்து முகத்தில் தடவி ஒரு மணி நேரம் கழித்து வெந்நீரில் முகத்தை கழுவ வேண்டும். இதை தினமும் செய்து வந்தால் வெப்பத்தினால் முகத்தில் ஏற்படும் தவிட்டு நிறமுள்ள புள்ளி மறையும்.
*உலர்ந்த சருமம் உள்ளவர்கள் கிளிசரினுடன் ரோஸ் வாட்டர் மற்றும் எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில் தடவலாம்.
*புளித்த மோரை முகத்தில் பதினைந்து நிமிடம் தடவி, மிதமான வெந்நீரில் கழுவினால் முகம் பொலிவாகும். பதினைந்து நாள் தொடர்ந்து செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
*முழங்கை கருப்பாகவும் சொர சொரப்பாகவும் இருந்தால் தேங்காய் எண்ணெயுடன் எலுமிச்சைச் சாறு கலந்து தடவி வர மிருதுவாகும்.
*ரோஜாப்பூ இதழ்களை அரைத்து அதோடு பால், பச்சைப் பயிறு மாவு மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவி வந்தால் சருமம் பளபளக்கும். மிருதுவாகவும் ரோஸ் நிறத்துடன் முகம் இருக்கும்.
*வெள்ளரிச்சாறு, சந்தனப் பொடி, கடலை மாவு மூன்றையும் சமஅளவு கலந்து முகம், கை, கால்களுக்கு தினமும் போட்டு வந்தால் பளிச்சென இருக்கும்.
*சந்தனம், முல்தானி மெட்டி கலந்த பேஸ்பாக் உபயோகித்து வர முகம் மிருதுவாகவும், பொலிவாகவும் மாறும்.
*கடலைமாவுடன் சிறிது மஞ்சள் தூள், எலுமிச்சைச்சாறு ஒரு டேபிள் ஸ்பூன் பால் கலந்து முகத்தில் தடவி அது காய்ந்ததும் மிதமான சுடு நீரில் கழுவ முகம் மிருதுவாகும்.
– காகை
ஜெ. ரவிக்குமார்

You may also like

Leave a Comment

16 − 12 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi