வாலிபரை மிரட்டி பணம் பறிப்பு: ஒருவர் கைது

பொன்னேரி: மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு ரயில் நிலைய அருகே வாலிபர் ஒருவரிடம் ஒரு கும்பல் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பதாக நேற்றுமுன்தினம் இரவு மீஞ்சூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து. எஸ்.ஐ பழனிவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். போலீசார் வருவதை பார்த்ததும் வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் தப்பியோட முயன்றனர்.

ஒருவரை போலீசார் மடக்கி பிடித்தனர். இதில், 2 பேர் தப்பித்துவிட்டனர். விசாரணையில், மணலி பகுதியை சேர்ந்த சந்தோஷ் (26) என்பதும் இவர்மீது மணலி, மீஞ்சூர், பொன்னேரி, மாதவரம் உள்ளிட்ட காவல்நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. தப்பிஓடிய கூட்டாளிகளை போலீசார் தேடுகின்றனர்.

Related posts

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலை திருவள்ளூர் மாவட்டம் பொத்தூரில் அடக்கம் செய்ய அனுமதி!

பெரம்பூர் கட்சி அலுவலகத்தில் நினைவிடம் அமைத்துக் கொள்ளலாம்: நீதிபதி பவானி சுப்பராயன்!

புதுச்சேரி பிரெஞ்சு துணை தூதரகத்தில் பிரான்ஸ் தேசிய சட்டமன்ற தேர்தலுக்கான 2ம் கட்ட வாக்குப்பதிவு துவங்கியது