ஒரு கட்டத்தில் கல்லாவில் இருந்த ரூ.25 ஆயிரம் பணத்தை 3 பேரும் பறித்துக்கொண்டு, மகேஸ்வரனை அடித்தும் கொலை மிரட்டல் விடுத்து தப்பித்து ஓடிவிட்டனர். இதுகுறித்து கடை உரிமையாளர் மகேஸ்வரன் கடையில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆதாரங்களாக வைத்து வழக்கறிஞர் மூலம் சிப்காட் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். அதன் அடிப்படையில், விசாரணை நடத்தியபோது, கடைக்குள் புகுந்தவர்கள் சிறுபுழல்பேட்டை பகுதியைச் சேர்ந்த பழனிராஜ் (34), மணிகண்டன் (24), நரேஷ் (25) ஆகியோர் என்பது தெரிய வந்தது. இவர்களை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.