இதுகுறித்து கண்ணகிநகர் காவல்நிலையத்தில் அலெக்ஸ் புகார் அளித்தார். போலீசார் அதே பகுதியை சேர்ந்த அருண் (26), நவீன் (19) ஆகியோரை நேற்று கைது செய்தனர். இவர்கள், கடந்த பிப்ரவரி மாதம் திருவான்மியூரில் தூய்மை பணியாளர் டில்லிபாபுவை கொலை செய்த வழக்கில் சிறையில் இருந்து 25 நாட்களுக்குமுன்புதான் ஜாமீனில் வெளியில் வந்துள்ளனர். இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. டில்லிபாபுவின் தாயையும் கொலை செய்ய திட்டமிட்டு இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இதனிடையே போலீசாரின் பிடியில் இருந்து தப்பித்து ஓடியபோது தடுக்கிவிழுந்ததில் இருவரும் காய மடைந்தனர். இதனால் இருவரையும் போலீசார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு இருவருக்கும் மாவு கட்டுபோடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து சோழிங்கநல்லூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.