வியாபாரியை மிரட்டி பணம், செல்போன் பறிப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த போளிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஞானசேகர்(37). இவர் இரும்பு கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு 9 மணி அளவில் போளிவாக்கம் டாஸ்மாக் கடை அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மணவாள நகர், கபிலர் நகர் பகுதியைச் சேர்ந்த சொனாட்டிகா (எ) வெங்கடேசன் (26) இவரை மடக்கி பணம் கேட்டு மிரட்டி உள்ளார்.

ஞானசேகர் பணம் இல்லை என கூறியுள்ளார். இருப்பினும், ஞானசேரின் பாக்கெட்டில் வைத்திருந்த ரூ.1500 பணத்தை பிடுங்கிக் கொண்டு செல்போனையும் கேட்டு மிரட்டி பிடுங்கி உள்ளார். உடனே, ஞானசேகர் கூச்சலிட்டுள்ளார். அப்போது அருகில் இருந்த நபர்கள் சத்தம் கேட்டு ஓடி வரவே வெங்கடேசன் கத்தியை காட்டிமிரட்டி விட்டு அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் பணம் மற்றும் செல்போன் பறித்தவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related posts

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு

பிளஸ் 1 மாணவி பாலியல் பலாத்காரம்: அத்தையின் கணவர் கைது

குஜராத் மாநிலம் சூரத் அருகே சச்சின் பாலி பகுதியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: 15 பேர் காயம்