டெல்லி: இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க தூதரகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடிதம் எழுதியுள்ளார். கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். மீனவர்களின் நலன் காக்க ஒன்றிய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது எனவும் கூறியுள்ளார்.