இந்நிலையில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்றவர்களையும் விரைந்து கைது செய்யக்கோரி தாக்கப்பட்ட முன்னாள் ராணுவ வீரர் உமாபதியின் மனைவி நதியா மற்றும் அப்பகுதி மக்கள் நேற்று மேல்பாடி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். காட்பாடி டிஎஸ்பி பழனி வந்து குற்றவாளிகளை விரைவில் கைது செய்வோம் என உறுதியளித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட எஸ்எஸ்ஐ விஜயகுமார் மணல் கடத்தலை தடுக்க தவறியதால், வேலூர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து எஸ்பி மணிவண்ணன் உத்தரவிட்டுள்ளார்.