உடனடியாக லோகோ பைலட் ரயிலை நிறுத்தினார். அவர் அளித்த தகவலின் பேரில் ரயில்வே பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். அப்போது தண்டவாளத்தில் 2 இடங்களில் உடைப்பு ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. ரயில்வே பணியாளர்கள் தற்காலிகமாக தண்டவாளத்தை சீரமைத்தனர். அதன்பின் ரயில் அங்கிருந்து மெதுவாக கிளம்பி சென்றது. லோகோ பைலட்டின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.