கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ்மலை கே.சி.பட்டியை அடுத்த செம்பராங்குளம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு போலீசார் தீவிர சோதனை நடத்தினர். இதில், பூதமலை என்ற இடத்தில் 10க்கும் மேற்பட்ட ஜெலட்டின் குச்சிகள், 20க்கும் மேற்பட்ட டெட்டனேட்டர்கள் உள்ளிட்ட வெடிபொருட்களை திண்டுக்கல் நந்தவனப்பட்டியை சேர்ந்த சரவணக்குமார் (27), இவரது தந்தை வேல்முருகன் (52), ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த கோவிந்தராஜ் (52) ஆகிய மூவரும் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து வெடிபொருட்களை போலீசார் பறிமுதல் செய்து மூவரையும் கைது செய்தனர்.
வெடி மருந்துகளுடன் தந்தை, மகன் கைது
previous post