புகாரின் மீது மருந்து கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் காலாவதியான மருந்து விற்றது கண்டு பிடிக்கப்பட்டது. பின்னர், மருந்து கட்டுப்பாடு மற்றும் காஸ்மெடிக் சட்டங்களின் விதிகளை மீறிய பிரிவின் கீழ் பாஜக மாவட்ட தலைவர், அவரது மனைவி மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்நிலையில் இந்த வழக்கு சைதை நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. காளிதாஸ் மற்றும் அவரது மனைவி நீதிமன்றத்தில் ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.