மாஜி கவர்னரின் மகனுக்கு பாஜ சீட் தராததால் தீக்குளிக்க தொண்டர் முயற்சி: தெலங்கானாவில் பரபரப்பு

திருமலை: மாஜி கவர்னர் மகனுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்காததால் பெட்ரோல் ஊற்றி தொண்டர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம், மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் கவர்னர் வித்யாசாகர்ராவின் மகன் விகாஸ்ராவ். இவர் தெலங்கானா மாநிலம், வெமுலவாடா தொகுதியில் போட்டியிட பாஜவில் வாய்ப்பு கேட்டு இருந்தார். ஆனால், அவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை. இதற்கு பதிலாக துலாஉமா என்பவருக்கு அந்த தொகுதி ஒதுக்கப்பட்டது.

இதனால், ஐதராபாத் நாம்பள்ளியில் உள்ள பாஜக மாநில அலுவலகம் முன்பு விகாஸ்ராவ் ஆதரவாளர்கள் நேற்று திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவரது ஆதரவாளர்களில் ஒருவரான மெடிப்பள்ளி மண்டலத்தை சேர்ந்த பாஜ தொண்டர் ஒருவர் உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். இதனை அறிந்த சக பாஜ நிர்வாகிகள் மற்றும் போலீசார் அவரை தடுத்து நிறுத்தி தண்ணீர் ஊற்றி அழைத்து சென்றனர். பிரதமர் மோடி நேற்று முன்தினம் ஐதராபாத்தில் பிற்படுத்தப்பட்டோர் சுயமரியாதை கூட்டத்தில் பங்கேற்ற நிலையில் பாஜ அலுவலகத்தில் ஒருவர் தீ குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related posts

சென்செக்ஸ் 379 புள்ளிகள் உயர்ந்து 79,855 புள்ளிகளை தொட்டு புதிய உச்சம்..!!

சிறுகதை-உறவு முத்திரை

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.53,240க்கு விற்பனை..!!