இதனால், ஐதராபாத் நாம்பள்ளியில் உள்ள பாஜக மாநில அலுவலகம் முன்பு விகாஸ்ராவ் ஆதரவாளர்கள் நேற்று திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவரது ஆதரவாளர்களில் ஒருவரான மெடிப்பள்ளி மண்டலத்தை சேர்ந்த பாஜ தொண்டர் ஒருவர் உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். இதனை அறிந்த சக பாஜ நிர்வாகிகள் மற்றும் போலீசார் அவரை தடுத்து நிறுத்தி தண்ணீர் ஊற்றி அழைத்து சென்றனர். பிரதமர் மோடி நேற்று முன்தினம் ஐதராபாத்தில் பிற்படுத்தப்பட்டோர் சுயமரியாதை கூட்டத்தில் பங்கேற்ற நிலையில் பாஜ அலுவலகத்தில் ஒருவர் தீ குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.