ஏழாயிரம்பண்ணை: விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளத்தில் மூன்றாம் கட்ட அகழாய்வு பணி நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் 10வது குழியில் நடந்த அகழாய்வில் தங்க நாணயம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தொல்லியல் துறை அதிகாரி பாஸ்கரன் கூறுகையில், ‘‘இந்த தங்க நாணயம் 17ம் நூற்றாண்டில் புழக்கத்தில் இருந்த தென்னிந்திய தங்கக்காசு. ஒரு பக்கத்தில் ஆறு இதழ் கொண்ட பூ போன்ற வடிவமும், மற்றொரு பக்கத்தில் புள்ளிகள் மற்றும் கோடுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.