இங்கு தோண்டப்பட்டுள்ள 15 குழிகளில் தற்போது வரை சுடுமண் ஆட்டக்காய்கள், சுடுமண் விளையாட்டுப் பொருட்கள், சுடுமண் உருவங்கள், அடித்தளம், நுண்கற்கால மூலப்பொருட்கள், சுடுமண் பதக்கங்கள், வட்டச்சில்லுகள், புகைப்பான்கள், பானைகள், கிண்ணங்கள், கண்ணாடி மணிகள், வளையல்கள் உள்ளிட்ட ஏராளமான தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் விஜயகரிசல்குளத்தில் நேற்று முன்தினம் நடந்த அகழாய்வில் முழு உருவ வேலைப்பாடுகளுடன் கூடிய சுடுமண்ணாலான பானை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட அகழாய்வில் இதுவரை 3,200க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.