வங்கதேச முன்னாள் பிரதமர் பேகம் கலிதா ஜியா 5 வழக்குகளில் இருந்து விடுவிப்பு

டாக்கா: வங்கதேச முன்னாள் பிரதமர் பேகம் கலிதா ஜியாவை 5 வழக்குகளில் இருந்து விடுவித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வங்கதேசத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அரசு பணிகளில் இடஒதுக்கீடு வழங்கும் முடிவை எதிர்த்து மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதன் காரணமாக வங்கதேச பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா தற்போது இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். இதைத்தொடர்ந்து வங்கதேசத்தில் பொருளாதார நிபுணர் டாக்டர். முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்துள்ளது.

இந்த இடைக்கால அரசில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீதும், அவரது உதவியாளர்கள் மீதும் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இதனிடையே யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசில் வங்கதேச முன்னாள் பிரதமர் பேகம் கலிதா ஜியா(79) கடந்த 6ம் தேதி வீட்டுக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது பேகம் கலிதா ஜியா 5 வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். போலியான நாளில் பிறந்த நாள் கொண்டாடியது, போர்க் குற்றவாளிகளுக்கு ஆதரவு தெரிவித்தது உள்பட வெவ்வேறு ஐந்து வழக்குகளில் இருந்து பேகம் கலிதா ஜியா விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்த காகம்: முதல் உதவி செய்து காப்பாற்றிய தீயணைப்பு வீரர் – குவிந்து வரும் பாராட்டு

கோவை அருகே பொதுமக்களை மிரட்டியது குட்டையில் சிக்கிய ராட்சத முதலை பவானிசாகர் அணையில் விடுவிப்பு

நெல்லை பூம்புகாரில் கொலு பொம்மை விற்பனை தொடங்கியது