Tuesday, July 2, 2024
Home » 2024ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்!

2024ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்!

by Arun Kumar
Published: Last Updated on

சென்னை: டிஎன்பிஎஸ்சி அடுத்த ஆண்டுக்கான தேர்வுத் திட்ட அட்டவணை விரைவில் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் அட்டவணையை சற்று முன்னர் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. ஆண்டு திட்ட அட்டவணை ஒவ்வொரு ஆண்டும் டிஎன்பிஎஸ்சியால் எந்தெந்த மாதத்தில் எந்தெந்த தேர்வுகள் நடத்தப்படும், எவ்வளவு பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்படும் என்பதற்கான ஒரு தோராயமான பட்டியலை ஆண்டு திட்ட அட்டவணையாக வெளியிட்டுள்ளது.

குரூப் 4 தேர்விற்கு 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் அறிவிக்கை வெளியிடப்படும் என்றும் ஜூன் மாதம் தேர்வு நடைபெறும் என்றும் அறிவித்துள்ளனர். இதற்கான பணியிடங்களை பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தேர்வாணையம் தகவல் தெரிவித்துள்ளது. சமூக சேவை துறையில் 2 பனியிடங்களும் பிப்ரவரி மாதம் அறிவிக்கை வெளியிடப்படும் என்றும் மே மாதம் தேர்வு நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு சட்டத்துறையில் ஆங்கில எழுத்தாளர் பதவிக்கு 6 பணியிடங்களுக்கு பிப்ரவரி மாதம் அறிவிக்கை வெளியிடப்படும் என்றும் மே மாதம் தேர்வு நடைபெறும். வனத்துறையில் 1264 பணியிடங்களுக்கு மார்ச் மாதம் அறிவிக்கை வெளியிடப்படும் ஜூன் மாதம் தேர்வு நடைபெறும்.

குரூப் 1 தேர்விற்கு 65 பணியிடங்களுக்கு மார்ச் மாதம் அறிவிக்கை வெளியிடப்படும் ஜூலை மாதம் தேர்வு நடைபெறும். ஆங்கில துணை சேவை துறையில் 467 பணியிடங்களுக்கு ஏப்ரல் மாதம் அறிவிக்கை வெளியிடப்படும் ஜூலை மாதம் தேர்வு நடைபெறும். சட்டத்துறையில் 25 பணியிடங்களுக்கு ஏப்ரல் மாதம் அறிவிக்கை வெளியிடப்படும். வனத்துறையில் வன அதிகாரி 118 பணியிடங்களுக்கு மே மாதம் அறிவிக்கை வெளியிடப்படும் ஆகஸ்ட் மாதம் தேர்வு நடைபெறும்.

ஒருங்கிணைந்த புவியியல் துறையில் 5 பணியிடங்களுக்கு மே மாதம் அறிவிக்கை வெளியிடப்படும் ஆகஸ்ட் மாதம் தேர்வு நடைபெறும். குரூப் 2 தேர்விற்கு 1294 பணியிடங்களுக்கு மே மாதம் அறிவிக்கை வெளியிடப்படும் ஆகஸ்ட் மாதம் தேர்வு நடைபெறும். அறிவியல் துறையில் 96 பணியிடங்களுக்கு ஜூன் மாதம் அறிவிக்கை வெளியிடப்படும் செப்டம்பர் மாதம் தேர்வு நடைபெறும். ஒருங்கிணைந்த புள்ளியியல் துறையில் 23 பணியிடங்களுக்கு ஜூன் மாதம் அறிவிக்கை வெளியிடப்படும் செப்டம்பர் மாதம் தேர்வு நடைபெறும்.

 

You may also like

Leave a Comment

five + 6 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi