புதுடெல்லி: ராணுவம், கடற்படை,விமானப்படை ஆகியவற்றில் பணியாற்றி ஓய்வு பெறும் அக்னிவீரர்களை பணியமர்த்துவது தொடர்பாக உள்துறை அமைச்சகம் முக்கிய முடிவை எடுத்துள்ளது. அதன்படி, சிஐஎஸ்எப், பிஎஸ்எப், சிஆர்பிஎப்பின் எதிர்கால பணி நியமனங்களில் முன்னாள் அக்னிவீரர்களுக்கு 10 சதவீத வேலைகள் ஒதுக்கப்படும். உடல் தேர்வுகளிலும், அவர்களுக்கு வயது தளர்வுடன் சேர்த்து விலக்கு அளிக்கப்படும்.