புதுடெல்லி: நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் விஜய் தர்தா உள்பட 3 பேருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சட்டீஸ்கரில் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் விஜய் தர்தா, அவரது மகன் தேவேந்தர் தர்தா மற்றும் தொழிலதிபர் மனோஜ் குமார் ஜெய்ஸ்வால் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து டெல்லி நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இதையடுத்து அவர்கள் மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இந்த வழக்கில் முன்னாள் நிலக்கரிதுறை செயலாளர் எச்.சி.குப்தா மற்றும் பொதுப்பணித்துறை ஊழியர்கள் கே.எஸ்.குரோபா, கே.சி.சம்ரியா ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிபதி சஞ்சய் பன்சால் உத்தரவிட்டார்.